மட்டக்களப்பு வாகனேரியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது!

WhatsApp Image 2021 12 30 at 14.52.56
WhatsApp Image 2021 12 30 at 14.52.56

மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள வாகனேரி குடாமுனை பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 25 வயதுடைய கசிப்பு வியாபாரி ஒருவரை 60 போத்தல் கசிப்புடன் இன்று வியாழக்கிழமை (30) பகல் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான இன்று பகல் குறித்த பகுதியிலுள்ள வீட்டை காவல்துறையினர் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். இதன் போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 25 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 போத்தல் கொண்ட கசிப்பை மீட்டனர்.

இதில் கைது செய்யபபட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.