காணாமல்போன மூவரில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு

kumari 01
kumari 01

ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல்போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (30) பிற்பகல் 14,16 ஆகிய வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளும் 29 வயதுடைய யுவதியொருவரும் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நிலையில் காணாமல்போயிருந்தனர்.

இதனையடுத்து காணாமல்போன மூவரையும் தேடும் பணிகளை ஹங்வெல்ல காவல்துறையினரும், சுழியோடல் குழுவினரும் இணைந்து முன்னெடுத்தனர்.

இந்நிலையில் இன்று காலை 16 வயதுடைய சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.