திருக்கோவில் விநாயகபுரத்தில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறல்

WhatsApp Image 2022 01 03 at 14.59.30
WhatsApp Image 2022 01 03 at 14.59.30

அம்பாறை திருக்கோவில் காவற்துறை பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று திங்கட்கிழமை (03) இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் காவற்துறையினர் தெரிவித்தனர்.

விநாயகபுரம் 3 பிரிவு பாலைக்குடா பாடசாலை வீதியிலுள்ள குறித்த வீட்டில் சம்பவதினமான இன்று பகல் உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையல் எரிவாயு அடுப்பு திடீரென வெடித்து சிதறியது. இருந்தபோதும் எவருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பாஸ்கரநாதன் புவிதரன் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்