நாட்டில் மேலும் 365 பேருக்கு கொவிட்

corona 2
corona 2

கொரோனா தொற்று உறுதியான மேலும் 365 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 588,300 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 12,135 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.