நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை

Rainning
Rainning

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பாகங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில பாகங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இரத்தினபுரி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.