கடலுக்குள் இருந்து வெளியே தென்படும் இயந்திர பாகங்கள்!

1641690859 mulai 2 1
1641690859 mulai 2 1

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் கடற்கரை பகுதியில் மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது.

IMG 20220108 WA0041

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில் கடற்கரையில் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.

இந் நிலையில், நேற்று (08) காலை புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த காலத்தில் புதைக்கப்பட்ட அல்லது கடலில் அள்ளுண்டு போன உழவு இயந்திரத்தின் பாங்கள் சில கரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தின் பெரிய ரயர்கள் உள்ளிட்ட பாகங்கள் கடற் கரையில் தென்பட்டுள்ளதுடன் இரும்பு துண்டுகளும் இனங்காணப்பட்டுள்ளது.

IMG 20220108 WA0025

2009 ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக இருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு காவற்துறையினர் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன், உழவு இயந்திரத்தின் பாகங்களை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டிப்பார்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.