நாட்டில் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக சஜித் பிரேமதாச தெரிவிப்பு

491628a0 7713ca54 sajith 850x460 acf cropped 1
491628a0 7713ca54 sajith 850x460 acf cropped 1

நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சகல விடயங்களுக்கும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக இதன்போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் குற்றஞ்சாட்டியுள்ளார்.