முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வீடற்ற குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் ஜக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் முத்துக்குமாரசாமி லக்சயன் அவர்கள் ஆரம்பித்துள்ளார்
இந்த வீட்டுத்திட்டங்கள் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராமத்திற்கு ஒரு வீடு என்ற திட்டத்தின் கீழ் ஆதர்சம் அறக்கட்டளை ஊடாக 100 வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளது.
குறித்த திட்டத்தின் ஊடாக வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்டபட்ட முத்துஜயன்கட்டு ஜீவநகர் கிராமத்தில் 09.01.2022 இன்று நடைபெற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கத்தின் எந்த வீட்டுத்திட்டமும் கிடக்காத குடும்பம் தெரிவுசெய்யப்பட்டு வீடு அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் ஜக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமி புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு.முகுந்தகஜன், ஜக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் நிஷாம் ஜமால்டீன் மற்றும் கிராம அலுவலர் நன்னீர் மீன்பிடி சங்கத்தின் உறுப்பினர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் கிராம மக்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்