அரசாங்கம் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது – பழனி திகாம்பரம்

thikamparam
thikamparam

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்கள் அனைவருக்கும் துரோகம் இழைத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இராகலை, வலப்பனை பிரதேச சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற, மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மக்களின் எந்தவொரு, அத்தியாவசிய தேவையையும் உரிய விதத்தில் அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை என அவர் தெரிவித்தார்