இருவேறு விபத்துகளில் இருவர் பலி

202005081531316104 Tamil News accident textiles employees 3 person died in krishnagiri SECVPF 1
202005081531316104 Tamil News accident textiles employees 3 person died in krishnagiri SECVPF 1

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலியில் இருந்து பரவகும்புக நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.

சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு வேலியில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சிலாபம் – பங்கதெனிய – ஆனமடுவ வீதியில் பயணித்த பாரவூர்தியொன்று எதிர்திசையில் வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பங்கதெனிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.