24 கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

kaithu

மதவாச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊர்தி ஒன்றில் 24 கிலோ 850 கிராம் கேரளா கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களை சேர்ந்த 20 மற்றும் 34 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (11) மதவாச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மதவாச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.