புத்தளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மணதீவு – செவ்வன்தீவு பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்குமிடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியதில் சந்தேகநபர் மற்றைய நபரைக் கட்டையால் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 3ஆம் தூண் – புத்தளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புத்தளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.