நாட்டில் மேலும் 160 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒமைக்ரொன் தொற்றாளர்களை கண்டறிவதற்காக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட 182 மாதிரிகள் தொடர்பான இறுதி அறிக்கை இன்றைய தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டதை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.