குடியிருப்பில் கள்ளுத்தவறணை வேண்டாம்: மக்கள் ஆர்ப்பாட்டம்!

IMG 8983 1600 1067
IMG 8983 1600 1067

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கள்ளுத்தவறணையை அகற்றி வேறு இடத்துக்கு மாற்றுமாறுகோரி முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலை கயட்டையடி மக்களால் இன்று (03) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்ற தினம் தண்ணீர் ஊற்று புளியங்குளம் வீதியில் மாமூலை கயட்டையடி பகுதியில் மிக நீண்டகாலமாக கள்ளுத்தவறணை இயங்கிவருகின்றது குறிப்பிடதக்கது.

ஆரம்பகாலத்தில் குறித்த கள்ளுத்தவறணை பகுதியில் கிராமங்கள் இல்லாத நிலையில் இந்த கள்ளுத்தவறணை இயங்கி வந்ததுள்ளது.

தற்போது அந்தப்பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இந் நிலையில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் கள்ளுத்தவறணை அமைந்திருப்பதால் பல்வேறுபட்ட குற்றச்செயல்களும் சட்டவிரோத நடவடிக்கைகளும் இடம் பெறுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளர்.

கள்ளுத்தவறணை வாயிலை மூடி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இச் சம்பவவிடத்திற்கு விரைந்த சென்ற முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலையீட்டையடுத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலருக்கு கையளிக்கும் விதமாக கிராம அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

விரைவில் இந்த கள்ளுத்தவறணை வேறு இடத்துக்கு மாற்றப்படாது விட்டால் தமது போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .