ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திய பெண் கைது

lady arrested 750x500 5ff89fd0c7201 1615628438
lady arrested 750x500 5ff89fd0c7201 1615628438

ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்கப்பிரிவினர் முன்னெடுத்த சோதனையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 799 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதானவர் கண்டியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.