இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
சிலாபம்,மட்டகளப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே பெரும்பாலும் நாட்டை விட்டு சட்டவிரோதமாக செல்வதற்கு முயற்சிப்பதாக சுட்டிக்காடியுள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் சட்டவிரோதமாக நாட்டை விட்டு சென்ற சுமார் 175 பேரை கைது செய்துள்ளதாகவும் இது குறித்து இலங்கை தமது கண்கானிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.