திருப்பதி ஏழுமலையானுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Evening Tamil News
Evening Tamil News

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டில் உண்டியல் மூலம் 1,161 கோடி ரூபாய்க்கு மேல் காணிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  அறை வாடகை மூலமும் 83 கோடியே 71 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தேவஸ்தானம் சுட்டிக்காட்டியுள்ளது.

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நாள்தோறும் அவர்கள் செலுத்தும் காணிக்கைகளைத் திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.

பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை, நிர்வாகச் செலவுகள் போக மீதமுள்ளவற்றை வங்கியில் வைப்புநிதியாக தேவஸ்தானம் சேமித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.