காவல்துறை விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
69 கிலோகிராம் சீமெந்தை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் கம்பஹா கிளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.