சுதந்திர ஒத்திகையை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

traffic police
traffic police

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைகள் காரணமாக நாளை (29) முதல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பிரதேசங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி நாளை (29) முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் இந்த விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனவே, அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு உபயோகிக்க வேண்டிய மாற்று வீதிகளை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.