சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைகள் காரணமாக நாளை (29) முதல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பிரதேசங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி நாளை (29) முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் இந்த விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
எனவே, அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு உபயோகிக்க வேண்டிய மாற்று வீதிகளை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.