விமான விபத்துக்கான காரணம் : பாதுகாப்பு அமைச்சு வெளியீடு

chamal rajapaksa1
chamal rajapaksa1

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான Y-12 ரக விமானம் ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளாகியதில், நால்வர் உயிரிழந்தனர்.

குறித்த விமானம் தாழ்வாகப் பறந்தமையே விபத்துக்குக் காரணமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

விபத்து தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.