YAMAHA நிறுவனத்தினரால் யாழ் நகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதியை சுற்றி இன்று மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வுக்கு யாழ் மாநகர முதல்வர் இ.ஆர்ணோல்ட் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். மர நடுகை திட்டத்தை முதல்வர் ஆரம்பிக்கும் முகமாக யாழ்.கோட்டைப் பகுதியில் மரக் கன்றை நாட்டினார்.
இந்த நிகழ்வில் யாழ் மாநகர பிரதி முதல்வர் ஈசன்,YAMAHA நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.