வவுனியாவில் சுதந்திர தினத்தினையடுத்து ஏ9 வீதி உட்பட மூன்று வீதிகள் 4 மணிநேரம் பூட்டு

IMG 20220204 WA0005
IMG 20220204 WA0005

வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் ஏ9 வீதி உட்பட மூன்று வீதிகள் 4 மணிநேரம் மூடப்படிருந்தது.

IMG 20220204 WA0008

சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் குலசிங்கம் திலீபன் கலந்து கொண்டிருந்தார்.

IMG 20220204 WA0006

நிகழ்வினையடுத்து ஏ9 வீதியின் மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து வைத்தியசாலை சுற்றுவட்டம் வரையிலான பாதையும், நகரசபை வீதி, நூலக வீதி ஆகியன காலை 6.30 மணி தொடக்கம் காலை 10.30 மணிவரையிலான காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டதுடன் அதி உயர் காவற்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

IMG 20220204 WA0004

மேலும் சுதந்திர தின நிகழ்வுகளுக்கு செல்பவர்கள் பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் நிகழ்வுகளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தன