தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

dethbody 1 1
dethbody 1 1

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களனிகம மற்றும் தொடங்கொட இடைமாறல்களுக்கு இடையில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

மகிழுந்து ஒன்றும் கனரக வாகனமொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மாத்தறை நோக்கி பயணித்த குறித்த மகிழுந்து அதற்கு முன்பாக சீமெந்து மூடைகளுடன் பயணத்துக்கொண்டிருந்த கனரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மகிழுந்தில் பயணித்த பெண்ணொருவர் உள்ளடங்கலாக மூவர் காயமடைந்த நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்மீமன பிரதேசத்தில் வசித்துவந்த 66 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மகிழுந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.