பொதுத்தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்கழு கூட்டம் நேற்று 3ம் நாள் கொழும்பில் நடைபெற்றது.
இதில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில்:
“ஜனாதிபதியின் உரை தொடர்பிலும் எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை எனவும் அது தொடர்பில் கட்சி இறுதி முடிவினை மேற்கொள்ளும்” என அவர் தெரிவித்தார்.