போலி மாணிக்கக் கல் விற்பனை – சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை

kalmunai court
kalmunai court

போலி மாணிக்க கற்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்த 06 சந்தேகநபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்று பிணையில் விடுதலை செய்துள்ளது.

போலி மாணிக்க கற்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்த 06 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனை அடுத்து சந்தேக நபர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணையில் விடுவித்து எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி வரை குறித்த வழக்கை ஒத்தி வைத்தார்.

மேலும், கைதான அறுவரும் அம்பாறை, விபிலை, நாமல் ஓய, இங்கினியாகல பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுள் இருவர் இலங்கை இராணுவத்திலிருந்து விலகி சென்றவர்கள் எனவும் மற்றுமொருவர் இலங்கை பொலிஸில் இருந்து இடை விலகியவர் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.