திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளார்.
ரத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹொரவ்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற காரும் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில் விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.