மின்சாரம் தாக்கி ஒருவர் பலி !

received 2325717914394269 1
received 2325717914394269 1

கிளிநொச்சியில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருநகர் தெற்கு பகுதியினை சேர்ந்த மங்களநேசன் வியாகுமார் எனும் 28 வயதுடைய இளைஞரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.