எரிபொருள் தட்டுப்பாட்டால் அரிசி ஆலை உரிமையாளர்கள் பெரும் பாதிப்பு

desel
desel

டீசல் தடுப்பாட்டு மற்றும் மின்சாரத்தடையால் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தற்போது பெரும்போக நெல் அறுவடைக்காலமாக இருப்பதால் வவுனியா உட்பட வன்னி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல் வவுனியாவில் அமைந்துள்ள அரிசி ஆலைகளால் கொள்வனவு செய்யப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் டீசல் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதுடன், அதனால் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லினை பதப்படுத்தும் இயந்திரங்கள் செயலிழந்து போயுள்ளது. 

இதனால் அறுவடை செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்படும் நெல்மூடைகள் ஆலைகளில் தேங்கும் நிலமை ஏற்பட்டுள்ளதுடன் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்கும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தயக்கம் காட்டிவருகின்றனர்