முல்லேரியாவ – ஹிம்புட்டான ஒழுங்கையில் 33 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இச்சோதனையின்போது, 300 கிராம் ஐஸ், இலத்திரனியல் தராசு, கையடக்கத் தொலைபேசி, 104 வெளிநாட்டு நாணயத்தாள்கள், உந்துருளி மற்றும் போதைப்பொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்பட்ட 102,500 ரூபா பணம் ஆகியவற்றை விசேட அதிரடிப்படை கைப்பற்றியுள்ளது.
சந்தேக நபர் 25 வயதுடையவர் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக அவர் முல்லேரியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொஹுவல பிரதேசத்தில் 100 கிராம் கொக்கேய்னுடன் 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.