தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை!

vilakam
vilakam

அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைதான 11 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை நீதிமன்றினால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ருவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் இலங்கை கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அத்துடன் எல்லை தாண்டிய கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்களை கடற்படையினர் கைது செய்வதோடு, அவர்களது படகுகள் சிலவும் அண்மையில் ஏலத்தில் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.