எரிவாயு கப்பலுக்கான கட்டணத்தை செலுத்த நிதியமைச்சு நடவடிக்கை!

79f9530c d5a4966f 1fa94d6d 5e9392e3 2d9408f2 b7945d8a ministry of finance 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
79f9530c d5a4966f 1fa94d6d 5e9392e3 2d9408f2 b7945d8a ministry of finance 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

எரிவாயுவுடன் நாட்டுக்கு வந்த 3 கப்பல்களில் ஒரு கப்பலுக்கு கட்டணம் செலுத்துவதற்கான டொலர் ஒதுக்கத்தை செய்வதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய குறித்த கப்பலில் இருந்து எரிவாயு விநியோகப் பணிகளை இன்று ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இன்றைய தினத்திற்குள் அவை பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நாட்டை வந்தடைந்த குறித்த 3 கப்பல்களுக்கும் கட்டணம் செலுத்தாமையினால் அவை இலங்கை கடல் எல்லையில் நங்கூரமிட்டிருந்தன.

இந்தநிலையில் சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வெதுப்பகம் உள்ளிட்ட சில துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பிரதான நகரங்களில் 60 சதவீதமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.