உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை முன்னெடுப்பு

kapputala
kapputala

ஹப்புத்தளையில் விமான விபத்தில் உயிரிழந்த 4 விமானப் படை வீரர்களின் பிரேத பரிசோதனை இன்று (04) முன்னெடுக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான நீதிவான் விசாரணைகள் நேற்று (03) பிற்பகல் பண்டாரவளை நீதவான் கீர்த்தி கும்புருஹேனவால் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று காலை ஹப்புத்தளை பிரதேசத்தில் விமான படைக்கு சொந்தமான Y 12 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 விமானப்படை வீரர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.