வவுனியாவில் அனர்த்தம்: விவசாயிகள் பாதிப்பு

0

வவுனியாவில் விவசாயக்குளம் உடைப்பெடுத்ததால் 120 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஈச்சங்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குற்பட்ட கள்ளிக்குளம் விவசாயக்குளமே நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு உடைப்பெடுத்துள்ளது.

2011ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட கள்ளிக்குளத்தில் இம்முறை அதிகளவு மழைவீழ்ச்சி காரணமாக குளம் நீரினால் நிரம்பிக் காணப்பட்ட நிலையில் நேற்றிரவு உடைப்பெடுத்துள்ளது.

இதன் காரணமாக குளத்தின் கீழ் விதைக்கப்பட்டு அறுவடைக்காலம் நெருங்கிய நெற்பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாரியளவில் நஷ்டமடைந்துள்ளனர்.