ஜனாதிபதிக்கு வணக்கம் செலுத்தாத சம்பிக்க ரணவக்க!

Parliment AR 1
Parliment AR 1

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதிக்கு எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் தெரிவிக்காமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.

நேற்றைய தினம் சிம்மாசன உரை நிகழ்த்துவதற்கு பாராளுமன்றத்துக்குள் ஜனாதிபதி வருகை தந்திருந்தார்.

ஜனாதிபதிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் தெரிவித்த போதும் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மாத்திரம் தனது இரு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு எழுந்து நின்றார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது சிம்மாசன உரையை நிகழ்த்தி விட்டு நாடாளுமன்றத்தை விட்டும் வெளியே செல்லும் போது ஜனாதிபதி சகல உறுப்பினர்களுக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்துள்ளார்.

இதில் சம்பிக்க ரணவக்க பதில் வணக்கம் தெரிவிக்காது இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.