மிஷேடோ நிறுவனத்தினால் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

FB IMG 1649396585893
FB IMG 1649396585893

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு மிஷேடோ( MSEDO) நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட 150 பயனாளிகளுக்கு உலருணவுப் பொருட்கள் நேற்று(07) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

FB IMG 1649396589666

இந் நிகழ்வில்  மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்(காணி) எஸ். குணபாலன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.

FB IMG 1649396604661

இதன்போது  10 கிலோகிராம் அரிசி, 5 கிலோகிராம் கோதுமை மா உள்ளடக்கியதாக மற்றும் சில அத்தியாவசிய பொருட்கள் உள்ளடக்கியதாக 17.2 கிலோ கிராம் நிறை கொண்ட 3500.00 ரூபாய் பெறுமதியான பொதிகளே இவ்வாறு வழங்கப்பட்டது.

FB IMG 1649396574351

இந் நிகழ்வில் மிஷேடோ(MSEDO )நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.