இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றம்!

Parliment in one site 800x534 1
Parliment in one site 800x534 1

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் நாடாளுமன்ற சபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி ஆகியோரை நிலையியல் கட்டளை இல. 79 கீழ் எதிர்வரும் நாடாளுமன்ற நடவடிக்கையிலிருந்து விலக்குவதற்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

அத்துடன், அவர்களை சபையிலிருந்து வெளியேற்றுவதற்கும் படைக்கலசேவிதருக்கு பணிப்புரை விடுத்து, குறித்த பணிகளை நிறைவேற்றும் வரையில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்தார்.