கிளிநொச்சியில் 5 கொலை குற்றவாளிகள் கைது!

News  4
News 4

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் புதுஐயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கடந்த (30) நாளன்று மீட்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி -கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்களை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (4) கைது செய்துள்ளனர்.

இக் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் மற்றும் தப்பித்து செல்ல பயன்படுத்திய இரண்டு உந்துருளிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ள தோடு மறைந்து உள்ளதாக தெரிவிக்கப்படும் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை ஜெசிந்தன் தலமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்