அமெரிக்கா மீண்டும் ஈராக்கில் வடக்கு பாக்தாத் பகுதியில் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிந்ததாக ஈராக் ஊடகங்கள் செய்தி தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் ஈரான் ஆதரவாளர்கள் சென்ற வாகன அணிவகுப்பை குறிவைத்து இன்று (4) அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இராணுவ தளபதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பேரணியாக செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றது.
இது வரை யாரும் வான்வழி தாக்கு பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும், அமெரிக்காவே நடத்தியதாக மேற்கோள் காட்டி ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானிய இராணுவ உயரதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், இத்தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான், அமெரிக்கா மீது பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில், 3,000 துருப்புக்களை அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.