20 ஆவது நாளாகவும் காலி முகத்திடலில் போராட்டம்

5dc0a7b0 mihana samugammedia 1
5dc0a7b0 mihana samugammedia 1

காலி முகத்திடலில் போராட்டம் இன்று 20 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு ஆதரவாக அலரிமாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கிறது.

இதேவேளை, காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில் நிட்டம்புவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

அத்துடன் புத்தளம், வத்தளை, கொட்டாவை, காலி, குருணாகல், பொலன்னறுவை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.