ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்

IMG 20220502 WA0002
IMG 20220502 WA0002

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் அகதிகளாக ராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் சென்று இறங்கி உள்ளனர்.

இவ்வாறு சென்ற இலங்கை தமிழர்களை  மீட்ட மரைன் காவற்துறையினர் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் திகதியில் இருந்து இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.