நாடாளுமன்ற நுழைவாயிலில் பலத்த பாதுகாப்பு

நாடாளுமன்ற அமர்வு தற்சமயம் இடம்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்திலும், அதனை அண்டிய பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பத்தரமுல்லை – தியத்த உயனவிலிருந்து பாதுகாப்புத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகிறது

அத்துடன், நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் சில நுழைவாயில் பகுதிகளிலும் காவல்துறை வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும், விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தின்கீழ், எந்தவொரு வீதியையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தலங்க காவல்துறை தெரிவித்துள்ளது.