கச்சதீவை மீட்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை – பா.ஜ.க செயற்குழு உறுப்பினர்

Tamil News large 2153451
Tamil News large 2153451

கச்சதீவை மீட்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

இலங்கை தமிழர்கள் நலனில் பாரதிய ஜனதா கட்சி எப்போதும் அக்கறையுடன் செயல்படும்.

அதன் அடிப்படையில் கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.