பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

vilakam
vilakam

கொள்ளுப்பிட்டி – அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதியில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களையும், அவர்களின் சகல உடமைகளையும் அகற்றுமாறு காவல்துறையினருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடைபாதைக்கு தடங்கல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், குறித்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை அகற்ற உத்தரவிடக் கோரி காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், அமைதியனதும் மக்களுக்கு இடையூறு அற்றதுமான போராட்டங்களுக்கு தடை இல்லை எனவும், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் தெரவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு-03, அலரிமாளிகைக்கு அருகில் உள்ள ஆர்ப்பாட்டத் தளத்தில் நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றவும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையூறாக ஒலிபெருக்கி மற்றும் வீதித் தடைகளை பயன்படுத்தவும் தடைவிதித்து உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.