நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு, தலங்கம காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை கடுவலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதேவேளை, பத்தரமுல்லை – பொல்துவ சந்தி நாடாளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது மஹரகம காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட 12 பேரும் கடுவலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.