24 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்மானம்

1623976892 train 2
1623976892 train 2

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொடருந்து தொழிற்சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

நாளை (5) நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

ஆறாம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் இணைப்பாளர் எஸ்.பி விதானகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தொடருந்து இயக்கப் பணிகள், தொழிற்பாடுகள், தொடருந்து கட்டுப்பாட்டுப் பணிகள், நிலைய அதிபர்கள், தொடருந்து இயந்திர சாரதிகள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.