ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உயிரிழப்பு

photodune 2008349 the drowning man m
photodune 2008349 the drowning man m

அக்கரைப்பற்று – இறக்காமம் – வாங்காமம் பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறார்கள், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

நேற்று பிற்பகல் குறித்த ஆற்றில் நீராடச் சென்ற 2 சிறுவர்களும், நீரில் இழுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, பிரதேசவாசிகள் அவர்களை மீட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்தநிலையில், அவர்கள் உயிரிழந்தாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியும், 6 வயது சிறுவனும் இதன்போது உயிரிழந்ததாகவும், சம்பவம் தொடர்பில் இறக்காமம் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.