சுயாதீன குழுவினால் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவில்லை! – மைத்திரி

Maithripala Srisena
Maithripala Srisena

நேற்று (11) இடம்பெற்ற சுயாதீன குழுவினரின் கூட்டத்தில் சுயாதீன குழுவினால் பிரதமர் பதவிக்காக பிரேரிக்கப்பட்டிருந்த பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டவில்லையென சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற சுயாதீனக் குழு கூட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களை ஜனாதிபதியிடம் முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏலவே தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.