கிளிநொச்சி றோயல் ஆங்கில பாடசாலை அமைந்துள்ள கனகபுரம் 9ம் பண்ணை கொங்கிறீட் வீதி முற்றும் முழுதாக சேதமடைந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
செல்வாநகர்,கனகபுரம்,புதுமுறிப்பு,ஆனந்தநகர், போன்ற கிராமமக்கள் இவ்வீதியை பயன்படுத்துவதால் உருத்திரபுரம் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் முதல் கிளி புனித பற்றிமா ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை செல்லும் மாணவர்கள் வரை பாதிப்படைகின்றனர்.
குறித்த வீதியானது 2017,2018 ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு பகுதி சேதமடைந்திருந்தது.
இந் நிலையில் இவ்வீதியினூடாக மிதிவண்டிகள், மாத்திரமே பயணிக்கக்கூடியதாக இருந்ததாகவும் அண்மையில் பெய்த(2019) பருவமழை காரணமாக முற்றும் முழுதாக சேதமடைந்துள்ளது.
இது தொடர்பில் தற்காலிக மாற்றங்கள் எவையும் ஏற்படாத நிலையில் அதிகாரிகளின் அசமந்த போக்கே இதற்கான காரணம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.