ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிவாயு கோரி பிரதேசவாசிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை – நாரேஹேன்பிட்டி வீதி, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு அருகில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.