மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி நபர் பலி

elephant attacked young man copy
elephant attacked young man copy

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பன்சேனை பகுதியில் காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், புன்சேனை அடைச்சல் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.